மெட்டா நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்ததற்கும், அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியதற்கும், சமூக ஊடக நிறுவனமான மெட்டா 375 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும் என அமெரிக்காவில் உள்ள ஒரு நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
New Mexico மாநிலத்தில் நடந்த ஆறு வார விசாரணைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
மெட்டா நிறுவனம்
இதில், மாநில அதிகாரிகள், சிறார்களை பாதுகாப்பதில் மெட்டா தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினர். இந்த தீர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையில் ஒரு அமெரிக்க மாநிலம் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வெற்றி பெற்ற முதல் சம்பவமாகும்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா , அதன் தளங்கள் இளைஞர்களின் மனநலத்துக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. மாநில வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுடன் ஜூரி ஒப்புக்கொண்டது.

அதன்படி, மெட்டா நிறுவனம் பாதுகாப்பை விட லாபத்தை முன்னிலைப்படுத்தி, New Mexico மாநிலத்தின் Unfair Practices Act சட்டத்தின் சில பிரிவுகளை மீறியதாக கூறப்பட்டது.
மேலும், மெட்டா தவறான அல்லது வழிகேடான தகவல்களை வழங்கியதோடு, குழந்தைகளின் பலவீனங்களையும் அனுபவக்குறைவையும் அநியாயமாக பயன்படுத்திய “அறநெறிக்கு மாறான” வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாகவும் ஜூரி உறுதி செய்தது.
குற்றச்சாட்டுகள் பதிவு
இந்த வழக்கில் 40 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். இதில் முன்னாள் ஊழியர்கள் (whistle-blowers) உட்பட பலர் இருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான ஆவணங்கள், அறிக்கைகள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆய்வு செய்யப்பட்டன. “இந்த தீர்ப்புடன் நாம் மரியாதையுடன் ஒத்துக்கொள்வதில்லை.
இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்,” என்று மெட்டா நிறுவன பேச்சாளர் தெரிவித்தார். “எங்கள் தளங்களில் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடினமாக உழைக்கிறோம்.

தீய நபர்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதும் அகற்றுவதும் சவாலானது என்பதை வெளிப்படையாக கூறி வருகிறோம்,” என்றும் அவர் கூறினார். Raúl Torrez என்ற New Mexico மாநிலத்தின் Attorney General, 2023ஆம் ஆண்டு மெட்டா மற்றும் அதன் CEOமார்க் சக்கர்பெர்க் மீது வழக்கு தொடர்ந்தார்.
அவரது அலுவலகம் மேற்கொண்ட மறைமுக விசாரணையில், 14 வயதிற்குட்பட்ட முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களாக நடித்து கணக்குகள் உருவாக்கப்பட்டன.
அந்த போலி கணக்குகளுக்கு பாலியல் சார்ந்த உள்ளடக்கங்கள் அனுப்பப்பட்டதோடு, அதுபோன்ற உள்ளடக்கங்களை நாடும் பெரியவர்கள் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஆயிரக்கணக்கான வழக்கு
இந்த தீர்ப்பை “ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் குடும்பத்திற்கும் ஒரு வரலாற்றுச் சாதனை” என்று Torrez கூறினார். “மெட்டா நிறுவனம் குழந்தைகளின் பாதுகாப்பை விட லாபத்தை முன்னிலைப்படுத்தியதற்கான விலையை இப்போது செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்த தீர்ப்பு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சட்டத்தின் முன் யாரும் மேலானவர்கள் இல்லை என்பதைக் காட்டும்,” என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை மே மாதத்தில் தொடங்க உள்ளது. இதில், “மெட்டா நிறுவனம் கூடுதல் அபராதம் செலுத்த வேண்டுமா மற்றும் அதன் தளங்களில் குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய வேண்டுமா என்பதை நீதிபதி தீர்மானிக்க உள்ளார்.
மேலும், கலிபோர்னியா மாநிலத்தில், Meta மற்றும் YouTube நிறுவனங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டுமா என்பது குறித்து வேறு ஒரு ஜூரி ஆய்வு செய்து வருகிறது.
இதில், தளங்களை அடிமைப்படுத்தும் வகையில் வடிவமைத்ததா என்பதும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த வழக்கு, அமெரிக்கா முழுவதும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளின் முடிவை பாதிக்கக்கூடிய முக்கியமானதாக கருதப்படுகிறது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri