ஈரான் மோதலில் உள்ளீர்க்கப்படும் அமெரிக்கா! இஸ்ரேல் நம்பியுள்ள இயக்கவியல்
அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரிக்கு எதிராக மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஈரானும் இஸ்ரேலும் ஒன்றையொன்று ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களால் குறிவைத்திருந்தன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் உட்பட வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாகவும் இதன்போது இரு நாடுகளிலும் ஏவுகணைகளால் தாக்குதல் முன்னெக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரானிய ஏவுகணைகளின் தொடர்ச்சியான அலைகள் இஸ்ரேலிய வான் எல்லையில் பரவியதன் மூலம், இஸ்ரேலிய இடைமறிப்பாளர்கள் அவர்களைச் தமது ஆயுதங்களை கொண்டு சந்தித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலின் திடீர் தாக்குதல், அந்நாட்டின் அணுசக்தி திட்டத்தை கடுமையாக சீர்குலைத்து, அணு ஆயுதத்தை உருவாக்க தேவையான நேரத்தை நீட்டிக்கும் ஒரு வெளிப்படையான இலக்கைக் கட்டமைத்துள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இந்த இருதரப்பும் பேச்சுவார்த்தை மற்றும் சமாதான போக்கை கடைப்பிடிக்காவிட்டால் இஸ்ரேலும் ஈரானும் நீண்டகால மோதல் போக்கை உருவாக்கிக்கொள்ளும் என நம்பப்படுகிறது.
மேலும், இது முழு பிராந்தியத்திற்கும் பரவி அமெரிக்காவையும் இதற்குள் உள்ளீர்க்கும் அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாகவும் கருதப்படுகிறது.
இதற்கு காரணம், இஸ்ரேலிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா ஒரு கடமையையும் அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த இயக்கவியலை இஸ்ரேல் உண்மையில் நம்பியுள்ளது. எனவே அமெரிக்காவும் மோதலுக்குள் இழுக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா ஆதரிப்பதாக அந்நாட்டு தரப்புக்கள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன.
அமெரிக்காவின் அனுமதியின்றி இந்தத் தாக்குதல் நடந்திருக்காது என்றும் ஈரானிய தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.
200 விமானத் தாக்குதல்
சமீபத்திய மாதங்களில் ஈரானுடன் அமெரிக்கா தனது அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாக்கும் நகர்வே இஸ்ரேலின் தாக்குதல் என்றுத் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு குறித்து தெளிவற்ற நிலையே தற்போதுவரை தொடர்கிறது. தனது ஒப்புதல் மற்றும் முன்னறிவிப்பு குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முரண்பட்ட கருத்துக்களை வழங்கியுள்ளதாக சில தரப்புக்கள் கூறியிருந்தாலும், வெள்ளைமாளிகையானது ஈரானில் இருந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றுமுழுதாக மறுத்து வருகிறது.
இஸ்ரேலிய 200 விமானத் தாக்குதலுக்கு முன்னதாக, திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், இராஜதந்திர ரீதியாக அதிக ஆதரவை அளிக்குமாறு ட்ரம்ப் இஸ்ரேலை பகிரங்கமாக வலியுறுத்தினார்.
ஆனால் நேற்று, அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் திட்டங்கள் குறித்து தனக்கு நன்கு தெரிந்திருந்ததாகவும், இஸ்ரேலிய தாக்குதலை "சிறந்தது" என்றும் விவரித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் ஈரானில் இருந்து உள்வரும் ஏவுகணைகளைக் கண்டறிந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது புதிய தாக்குதல் அலையை ஈரான் தொடங்கியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன .
மேலும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானிய இராணுவ நடவடிக்கையின் பெயரைக் "ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 தாக்குதல்களின் புதிய சுற்று" என்று குறிப்பிட்டு இஸ்ரேல் இலக்குகள் தாக்கப்பட்டன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri
