மத்திய கிழக்கின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத் சென்றடைந்த அமெரிக்க துணை ஜனாதிபதி
அமெரிக்கத் துணை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு ஜே.டி. வான்ஸ் எதிர்கொள்ளும் மிகக் கடினமான மற்றும் சவாலான பணியாக தற்போதைய பயணம் கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா - ஈரான் இடையிலான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் தூதுக்குழுவிற்கு வான்ஸ் தலைமை தாங்குகிறார்.
இரண்டு வார போர்நிறுத்தம்
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக இரண்டு வார போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்தப் பேச்சுவார்த்தை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதுடன், அதே நேரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளைத் திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு தீர்வை எட்டுவது வான்ஸிற்குப் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ட்ரம்பின் 'மேகா' (MAGA) ஆதரவாளர்கள் மற்றும் போர்களில் தலையிடுவதைத் தவிர்க்க விரும்பும் குழுவினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, இதனை ஒரு வெற்றிகரமான பயணமாக மாற்ற வேண்டிய அழுத்தமும் அவருக்கு உள்ளது.
ஈரானிய தூதுக்குழுவினர் பாகிஸ்தான் சென்றடைந்த விமானத்தின் பெயர்! தரையிறங்கியவுடன் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
ஹோர்முஸ் நீரிணை
குறிப்பாக, மூடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, விண்ணைத் தொட்டுள்ள மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதற்கான உடனடித் தீர்வு காணப்படுமா என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளிக்கிழமை காலை வொஷிங்டனில் இருந்து புறப்பட்ட வான்ஸ், பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி ட்ரம்ப் சில தெளிவான வழிகாட்டுதல்களைத் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் மத்திய கிழக்கின் எதிர்காலப் போக்கை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.