மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA
தென்மேற்கு ஈரான் மலைப்பகுதிகளில் எங்கோ மறைந்து இருந்த அமெரிக்க விமானப்படை வீரர் தொடர்பு கொண்டபோது, அவர் அனுப்பிய செய்தி மிகவும் குறுகியதும் எதிர்பாராததுமானதாலும், அது ஈரானின் சதி ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் Washington, D.C.இல் எழுந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதாவது அந்த வார்த்தைகள் ஒரு முஸ்லிம் சொல்வது போல இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.
இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு
விசித்திரமான செய்தி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Axios ஊடகத்திற்கு தெரிவித்ததாவது, F-15E Strike Eagle விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அந்த ஆயுத அமைப்பு அதிகாரி தனது ரேடியோவில் ஒரு சுருக்கமான, விசித்திரமான செய்தியை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விமான வீரர் Power be to God’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ரேடியோவில் சொன்னது, ஒரு முஸ்லிம் சொல்வது போலவே கேட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
God is good.
— Pete Hegseth (@PeteHegseth) April 5, 2026
பின்னர், அந்த அதிகாரியை நன்கு அறிந்தவர்கள், அவர் மதநம்பிக்கையுடன் இருந்தவர் என்பதால் இப்படிச் சொல்வது இயல்பானது என்று விளக்கினர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு அதிகாரியும் ட்ரம்ப் கூறியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவர் பயன்படுத்திய சரியான வார்த்தைகள் “God is good” என இருந்ததாக தெரிவித்தார். இதே வார்த்தைகளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth, X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மலைகளில் 48 மணி நேர போராட்டம்
அந்த விமான வீரரிடம் ஒரு தொடர்பு சாதனம், ஒரு டிராக்கிங் பீகன் மற்றும் ஒரு கைத் துப்பாக்கியும் இருந்தது.
அமெரிக்க மற்றும் ஈரான் படைகள் அவரைக் கண்டுபிடிக்க போட்டியிட்ட நிலையில், அவர் மலைச் சுரங்கங்களில் மறைந்து கொண்டு, தொடர்ந்து இடம் மாறிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில்7,000 அடி உயரமுள்ள மலைச்சரிவை ஏறியும், அவரைத் தேடி வந்த படைகளுக்கு முன்னிலையில் இருக்க முயன்றார்.

24 மணி நேரத்திற்கும் மேலாக, அவரது இருப்பிடம் அமெரிக்காவிற்கே தெரியாமல் இருந்தது. Central Intelligence Agency (CIA), “சிறப்பு திறன்களை” பயன்படுத்தி, மலைப்பகுதிகளில் நகர்ந்துகொண்டிருந்த அவரை கண்டறிந்ததாக The New York Times தெரிவித்துள்ளது.
அவரது துல்லியமான இருப்பிடம் உறுதிப்படுத்தப்பட்டதும், அந்த தகவல் வெள்ளை மாளிகை, Pentagon மற்றும் அமெரிக்க இராணுவத்துடன் பகிரப்பட்டது. பின்னர், சனிக்கிழமை இரவு ஒரு சிறப்பு படை குழு அந்த இடத்திற்கு அருகில் அனுப்பப்பட்டது.
முதல் நிகழ்வு
ஏப்ரல் 3 அன்று, இரட்டை இன்ஜின் கொண்ட F-15E Strike Eagle போர் விமானம், தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானி உடனடியாக மீட்கப்பட்டார். ஆனால் ஆயுத அமைப்பு அதிகாரியை தேடும் பணிகள் இரண்டு நாட்கள் நீடித்தன.

இந்த மீட்பு நடவடிக்கையை அறிவித்த ட்ரம்ப், Truth Social-ல், இந்த வீரர், எதிரிகளால் சூழப்பட்ட ஈரானின் ஆபத்தான மலைப்பகுதிகளில், எங்கள் எதிரிகளால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தார் என்று பதிவிட்டார்.
அந்த அதிகாரிக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் முழுமையாக குணமடைவார் என்று ட்ரம்ப் தெரிவித்தார். மீட்பு குழுவில் எவருக்கும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படவில்லை.
மேலும் எதிரி நாட்டின் ஆழமான பகுதியிலிருந்து, இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்பட்ட முதல் நிகழ்வு இதுவாகும் என்றும் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை வர்ணித்துள்ளார்.
இரவோடு இரவாக ஈராக்- அமெரிக்க தூதரகங்கள் மீது நடந்த தாக்குதல்கள்! 3 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு அறிவிப்பு
"Praise be to Allah" - சற்று முன்னர் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு.. ஈரானுக்கு மிக மோசமான வார்த்தைகளால் எச்சரிக்கை!