காசாவுக்கான போர்நிறுத்தத்தை தவறாக வழிநடத்தும் அமெரிக்கா!
காசாவுக்கான சமீபத்திய போர்நிறுத்தத் திட்டத்தைப் பற்றி அமெரிக்கா வெளிப்படுத்திவரும் கருத்தானது தவறாக வழிநடத்தல் முறைக்கு அமைவாக மேற்கொள்வதாக தோஹா பட்டதாரி ஆய்வுக் கழகத்தின் ஊடக ஆய்வுகள் பேராசிரியரான முகமட் எல்மஸ்ரி குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் போர் நிறுத்தம் என்ற போர்வையில் பெரிய குழப்ப நிலையை அமேரிக்கா உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
''போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் இன்னும் அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. எனினும் அமெரிக்கா அதில் முனைப்பு காட்டி வருகிறது.
உண்மைத்தன்மை
அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன்(Antony Blinken) எத்தனை முறை போர்நிறுத்தம் பற்றி வெளிப்படுத்தினாலும், அதன் உண்மைத்தன்மை இதுவரை வெளிவரவில்லை.

இந்தப் போரைத் தொடரப் போவதாக இஸ்ரேல் பலமுறை கூறியுள்ளது.
இது அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்த முன்மொழிவுக்கு நேர் முரணானது.
எனினும் ஹமாஸ் விரோதப் போக்கை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri