இந்தியாவை மிரள வைக்கும் அமெரிக்காவின் C-130 விமானம்..! பலாலியில் தொடர் தரையிறக்கம்
இலங்கையில் அதிரடியாக களமிறங்கியுள்ள அமெரிக்கா, முக்கிய இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது எனலாம்.
டிட்வா புயலை தொடர்ந்து, இலங்கையை மீட்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவிக் கரம் கோரியது.
அதன்படி, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் என அடுத்தடுத்து பல நாடுகள் இலங்கைக்குள் நிவாரணங்களுடன் படையினரை அனுப்பி வைத்தன.
இது ஒரு மனிதாபிமான ரீதியிலான செயற்பாடாக எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இவற்றில் சில நாடுகள் இலங்கைக்குள், முக்கிய இராஜதந்திர நகர்வுகளுடன் உள்நுழைந்துள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குறிப்பாக தனது அதிசக்தி வாய்ந்த C-130 விமானத்தை யாழ்ப்பாணத்தில் தரையிறக்கியுள்ள அமெரிக்கா.. இது உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்களை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,