பொப் பிரான்சிஸுக்கு அமெரிக்கா வழங்கவுள்ள அங்கீகாரம்
அமெரிக்காவின் (US) உயரிய குடிமகன் ஒருவரை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை பொப் பிரான்சிஸுக்கு (Pope Francis) வழங்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தீர்மானித்துள்ளார்.
அமைதி, மனித உரிமைகள் மற்றும் ஏழைகள் மீது பொப் பிரான்சிஸ் செலுத்தும் அக்கறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றினை அங்கீகரித்தே இந்த விருதினை வழங்க அவர் முடிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி 11ஆம் திகதி அன்று இருவருக்கும் இடையே இடம்பெற்ற தொலைபேசி அழைப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தடைப்பட்ட சந்திப்பு...
வத்திகானில் கடந்த 10 ஆம் திகதி மேற்கொள்ளவிருந்த சந்திப்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக பைடன், வத்திகான் செல்வது தடைப்பட்டதையடுத்து பொப் பிரான்சிஸுடன் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் 20ஆம் திகதி அன்று இடம்பெற்ற உரையாடலின் போது மனித உரிமைகள் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், மரண தண்டனை கைதிகள் குறித்து பொப், தனது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
தொலைபேசி அழைப்பு
இதன் பின்னர், பைடன் 37 நபர்களின் மரண தண்டனையை குறைத்து, நீதி மற்றும் இரக்கத்திற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
மேலும், இருவருக்கும் இடையில் இடம்பெற்ற குறித்த இரு கலந்துரையாடல்களின் போதும் மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்தும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொப் பிரான்சின் மனிதாபிமான நோக்கம் மற்றும் செயல்களை அங்கீகரிக்கும் வகையில் ஜனாதிபதி சுதந்திரப் பதக்கத்தை வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
