முடக்கப்பட்டுள்ள நிதியுதவிகள் குறித்து அமெரிக்க தூதுவரின் செய்தி
அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள அண்மைய மாற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதன்படி, அமெரிக்காவின் வெளிநாட்டு உதவியின் உலகளாவிய மதிப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பை தூதர் வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய நலனை முன்னேற்றுவதற்காகவே வெளிநாட்டு உதவி நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உதவிகள்
இந்தநிலையில், வெளியுறவு செயலாளராக இருக்கும் வரை மற்றும் ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் வரை செலவிடப்படும் ஒவ்வொரு டொலரும் அமெரிக்க தேசிய நலன்களை முன்னேற்றும் டொலராக இருக்கும் என்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளதாக தூதுவர் சங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா, வெளிநாட்டு உதவிகளை ஒழிக்கப் போவதில்லை, ஆனால் அர்த்தமுள்ள வெளிநாட்டு உதவிகளை வழங்கப் போகிறது, என்றும் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியதாக தூதர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam