இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி! பாகிஸ்தான் அறிவிப்பு
இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு விடுத்துள்ளார்.
இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு கடந்த 23ம் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார்.
பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டன.
இந்நிலையில், இம்ரான் கானின் இலங்கை விஜயம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இலங்கையில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சமீபத்திய கோவிட் - 19 ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.
இவ்வாறான நிலையில், இலங்கைக்கு, பாகிஸ்தான் கோடிக்கணக்கான நிதியுதவி அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
