ஒக்டோபர் மாதம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்து
தற்போதைய முடக்கலை நீக்குவது பற்றிய ஊகங்கள் இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் சங்கம், ஒக்டோபர் ஆரம்பம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளின் தியாகங்களை, முழு நாடும் பெறவேண்டும். எனவே, முடக்கல் நீடிக்கப்படும் போது நீண்ட கால ஆதாய விடயங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் காரணமாக, நோய் தீவிரமாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் இறப்பு விகிதம் திடீரென உயரக்கூடும். ஒரு நாடாக, தற்போதைய சிவப்பு மண்டலத்தில் இருந்து, பசுமை மண்டலத்திற்கு செல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டு, இந்த முடக்கலை தீவிரமாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் கோரியுள்ளது.
முழு நேர பீட்சா தயாரிப்பு; இடையில் கிரிக்கெட் - இலங்கையில் பிறந்து இத்தாலியில் கலக்கும் கிரிஷான் News Lankasri
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri