ஒக்டோபர் மாதம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்து
தற்போதைய முடக்கலை நீக்குவது பற்றிய ஊகங்கள் இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களின் சங்கம், ஒக்டோபர் ஆரம்பம் வரையில் முடக்கலை மேலும் நீடிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளின் தியாகங்களை, முழு நாடும் பெறவேண்டும். எனவே, முடக்கல் நீடிக்கப்படும் போது நீண்ட கால ஆதாய விடயங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் காரணமாக, நோய் தீவிரமாக பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
இதனால் மருத்துவமனையில் சேர்க்கை மற்றும் இறப்பு விகிதம் திடீரென உயரக்கூடும். ஒரு நாடாக, தற்போதைய சிவப்பு மண்டலத்தில் இருந்து, பசுமை மண்டலத்திற்கு செல்வதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இதை மனதில் கொண்டு, இந்த முடக்கலை தீவிரமாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் கோரியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri