இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழக மீனவர்களையும் மீண்டும் அழைத்து வர இந்திய அரசாங்கம் உடனடியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் (Thol. Thirumavalavan) கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதியன்று வடக்கின் கோவிலன் வெளிச்சவீட்டுக்கு அருகில் வைத்து இலங்கையின் கடற்படையினரின் படகில் மோதிய இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்போது இரண்டு இந்திய மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த மீனவர் ஒருவாின் சடலம் இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்டது.
குறித்த சடலம் நேற்று கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோரப்படையினரிடம் இலங்கை கடற்படையினரால் கையளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இலங்கையின் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டதாக கூறப்படும் இரண்டு இந்திய மீனவர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோாியுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
இலங்கையில் கொலையுண்ட தமிழக மீனவர்? கேள்வியெழுப்பும் முக்கியஸ்தர்
காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பி வைப்படும் இந்திய மீனவரின் சடலம்