நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குக! ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு மகாநாயக்க தேரர்கள் அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளனர்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுதல் மற்றும் நேர்மையான சர்வகட்சி அரசை உடனடியாக ஸ்தாபித்தல் உள்ளிட்ட 10 விடயங்கள் தொடர்பில் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
எனவே இவற்றினை கருத்திற்கொண்டு நேர்மையான சர்வகட்சி அரசை உடன் நியமிக்குமாறும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆலாசனை வழங்கியுள்ளனர்.