பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் மீண்டும் வலியுறுத்து
பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதார துறையினர் மீண்டும் மக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் வாரங்களில் பாரியளவில் ஒமிக்ரோன் அலை வியாபிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனை தடுக்க மக்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அனைவரும் கூடிய விரைவில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
நாடு என்ற ரீதியில் கூட்டு நோய் எதிர்ப்புபு சக்தியை உருவாக்கிக்கொள்ள வேண்டுமாயின் மொத்த சனத்தொகையில் 60 முதல் 65 வீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்க வேண்டுமென சுகாதார மேம்பாட்டு காரியாலயத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவேகெதர தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு மக்கள் எவ்வித அச்சத்தையும் காட்ட வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.