மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாவட்டங்களின் தலைநகரம்
நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் தலைநகரத்தை மாநகரசபையாக அறிவிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, கம்பஹா மற்றும் மன்னார் ஆகிய நகரசபைகள் இவ்வாறு மாநகரசபைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
அமைச்சரவையில் அனுமதி
உள்ளூராட்சி மன்ற அமைச்சர்கள் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.

மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகரசபைகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam