மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகளை மாநகரசபைகளாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான முதல்கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாவட்டங்களின் தலைநகரம்
நாட்டின் அனைத்து மாவட்டங்களினதும் தலைநகரத்தை மாநகரசபையாக அறிவிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, கம்பஹா மற்றும் மன்னார் ஆகிய நகரசபைகள் இவ்வாறு மாநகரசபைகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
அமைச்சரவையில் அனுமதி
உள்ளூராட்சி மன்ற அமைச்சர்கள் என்ற வகையில் பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டது.
மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகரசபைகளுக்கு விசேட வரப்பிரசாதங்கள் கிடைக்கப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
