தமிழர் தாயகப் பகுதிகளில் ஆதரவற்று தனிமையில் வாழும் தாயும் மகளும்!
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 133 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு - வாகரை, கதிரவெளி பகுதியில் ஆதரவற்று வாழும் தாயும் மகளின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 134)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600