யாழில் விற்பனையின்றி தேங்கியுள்ள எரிபொருட்கள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெட்ரோலுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டிருந்த நிலையில், தற்போது எரிபொருட்கள் விற்பனையின்றி தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது கியூ.ஆர் முறைமையில் பெட்ரோல் விநியோகம் மேற்கொள்ளப்படும் நிலையில், பெட்ரோலை அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை அனைவரும் தடையின்றி பெறக்கூடிய நிலைமை தோன்றியுள்ளது என்று எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
எரிபொருள் கொள்வனவில் கட்டுப்பாடுகள்
வாரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருளையே ஒருவர் கொள்வனவு செய்ய முடியும் என்பதால், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல்,டீசல் என்பன விற்பனை செய்ய முடியாமல் தேங்கி இருப்பதால், புதிதாக எரிபொருளை கொண்டுவர முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது வழமையான விற்பனை இலாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய
உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.





மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
