ரணிலின் பிரசார நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க மறுக்கும் ஐ.தே.க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் ஜனாதிபதிக்கு எதிரான போக்கில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் குழுவினால் மாத்திரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாது எனத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான ஆதரவை ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri