மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு முன்னர் ஆலோசிக்கப்பட்ட போதிலும், மருதானை மண்சந்தி டவர் ஹால் தியேட்டருக்கு அருகில் மே தினக் கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுச்செயலாளர் விடுத்துள்ள பணிப்புரை
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் அமைப்பாளர்கள் தலா அறுபது பேருடன் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியானது மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் மே தினத்தை நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan