இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக மீண்டும் பேராதனை பல்கலைக்கழகம் தெரிவு
இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் பெயரிடப்பட்டுள்ளது.
Times Higher Education World ranking இன் படி, பல்கலைக்கழகம் பெயரிடப்பட்டுள்ளது.
Times Higher Education World ranking இன் படி, ஆண்டுதோறும் உயர்கல்விக்கான உலகின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களை வகைப்படுத்தி அதன் மூலம் உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் பல்வேறு பணிகள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய சரியான புரிதலை வழங்குகின்றது.
இவை பல்கலைக்கழக நடவடிக்கைகளின் மூன்று முக்கிய பகுதிகளாக ஆராய்ச்சி, செல்வாக்கு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.
இந்த மூன்று பிரிவுகளின் கீழ் அணுகும் 13 செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வகைப்படுத்தல் செய்யப்படுகின்றது.
இதன்படி, Times World University தரவரிசையின் படி இலங்கையின் 01 ஆவது பல்கலைக்கழகமாக பேராதனைப் பல்கலைக்கழகம் மாறியுள்ளதுடன், நான்காவது தடவையாகவும் பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கையின் 01 ஆவது பல்கலைக்கழகமாக இடம்பிடித்துள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
