பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படுகின்றது! - வெளியானது அறிவிப்பு
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து பல்கலைக்கழகங்களையும் நவம்பர் மாதமளவில் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amaratunge) தெரிவித்துள்ளார்.
20 முதல் 30 வயது வரையிலான மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஒக்ரோபர் மாதத்தில் பூர்த்தியாகும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இந்த நிலையில் நவம்பர் மாதமளவில் பல்கலைக்கழகங்களை கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.