ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை:இலங்கை வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதையும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்பதாக அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கை இது என்று இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீடித்த தீர்வுக்கான முயற்சி
ஒரு நீடித்த தீர்வைக் காண்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு சமாதான செயல்முறையின் முக்கியத்துவத்தையும் இலங்கை வலியுறுத்துகிறது.
இந்தப் போர்நிறுத்தத்தில் இராஜதந்திர ரீதியாகத் தலையிட்ட தரப்பினரின் பங்களிப்பையும் முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri