கொழும்பில் இரகசியச் சந்திப்புக்களில் ஈடுபடும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைவதற்கு முடிவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொழும்பில் 5 தடவைகள் இரகசிய சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் பல விடயங்கள் இந்தச் சந்திப்புக்களின்போது பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இறுதியாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் ஒரே தடவையில் குழுவாகச் சென்று அரசாங்கத்துடன் இணைவதா அல்லது கட்டம் கட்டமாக இணைவதா என்பது தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.
ரணில் அரசாங்கம்
சகலரும் ஒரே தடவையில் அரசாங்கத்துடன் இணைந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்
பிரேமதாச மாத்திரமே மிஞ்சுவார் என்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.