வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பு மனு தாக்கல் (Photos)
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (21.01.2023) காலை வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களான ரோ.ரசிகா மற்றும் நிரோஸ் ஆகியோரின் தலைமையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமது வேட்புமனுவை வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டி
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.