ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட நாம் தயார் - ஐக்கிய தேசிய கட்சி
ஐக்கிய தேசிய கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்ததே இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பித்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்ற பின் செய்தியாளார்கள் மத்தியில் பேசும் போதே ருவன் விஜேவர்த்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் பெரும்பாலனவர்கள் முன்னாள், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்தவர்கள்.
எனவே அவர்களுடன் இணைந்து செயற்படுவதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது ஐக்கிய தேசிய கட்சி தடைகளை விதிக்கவில்லை. அவர்களுக்காக கதவுகள் திறந்தே இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri