பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், கரிசனை வெளியிட்டதை அடுத்து, பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இன்று காலை, மேற்கொண்ட பரிசோதனையை அடுத்து, ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவ மேற்பார்வை
அத்துடன் அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் குடும்பத்தினர் பால்மோரலுக்கு பயணம் செய்துள்ளதாக கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
96 வயதான பிரித்தானிய மகாராணி புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையின் போது, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆழ்ந்த கவலை
இந்த செய்தியால் முழு நாடும்" ஆழ்ந்த கவலையில் இருப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார். தமது எண்ணங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியம் முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்கள் இந்த நேரத்தில் மகா ராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri
