பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், கரிசனை வெளியிட்டதை அடுத்து, பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இன்று காலை, மேற்கொண்ட பரிசோதனையை அடுத்து, ராணியின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.
மருத்துவ மேற்பார்வை
அத்துடன் அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரித்தானிய இளவரசர் மற்றும் குடும்பத்தினர் பால்மோரலுக்கு பயணம் செய்துள்ளதாக கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது.
96 வயதான பிரித்தானிய மகாராணி புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையின் போது, மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆழ்ந்த கவலை
இந்த செய்தியால் முழு நாடும்" ஆழ்ந்த கவலையில் இருப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார். தமது எண்ணங்கள் மற்றும் ஐக்கிய இராச்சியம் முழுவதும் உள்ள மக்களின் எண்ணங்கள் இந்த நேரத்தில் மகா ராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.





இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
