ஐக்கிய இராச்சியத்தின் தடை: சுமந்திரனின் பகிரங்க கருத்து
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவர் மீது பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடையை வரவேற்பதாக முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூர்ய, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு பேர் மீது பிரித்தானிய அரசாங்கம், கடந்த திங்களன்று(24) தடைகளை விதித்தது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது, மேற்குறிப்பிட்ட நபர்கள் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரித்தானிய அரசாங்கம் விளக்கியிருந்தது.
பயணத் தடை, சொத்து முடக்கம்
குறித்த தடையில், பிரித்தானியாவுக்கான பயணத் தடை மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும்.

இந்நிலையில், இதனை தான் வரவேற்பதாக சுமந்திரன் தனது 'X' தள பதிவொன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri