ஐ.நாவில் தமிழருக்கு நீதி வேண்டி எந்தப் பிரேரணை வந்தாலும் முழுமையாக வரவேற்போம்: சம்பந்தன்
"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது" என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளது. பிரிட்டன் தலைமையில் இப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்குச் சார்பான பிரேரணை
"இலங்கை விவகாரம் ஜெனிவாவில் இம்முறை எதிரொலிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.
இறுதிப் போரில் நடந்த மன்னிக்க முடியாத சம்பவங்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சார்பாக எந்தப் பிரேரணை வந்தாலும் அதனை முழுமையாக வரவேற்போம்.
அந்தப் பிரேரணையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தங்களையும் கொடுத்து வருவோம்" என்றார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
