ஓமான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு ஒன்றிணைந்த ஆடைகள் சங்கம் கண்டனம்
நீர்கொழும்பு-கட்டான, ஹல்பேயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஓமான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு ஒன்றிணைந்த ஆடைகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று குறித்த ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி மீது சிலர் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பாரபட்சமற்ற விசாரணை
இந்தநிலையில் இந்த செயல் தொடர்பில் பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து பாரபட்சமற்ற விசாரணை மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை தேவையென்று ஒன்றிணைந்த ஆடைகள் சங்கம் கோரியுள்ளது.
இலங்கைக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ள ஓமானிய முகாமைத்துவ பணிப்பாளரின் இல்லத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.