அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவிப்பு
ஈரானிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
இது தொடர்பில் வெளியான அறிக்கையில், "நாட்டின் சிதறிய பகுதிகளில் கேட்கப்படும் சத்தங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதாலும், போர் விமானங்கள் ட்ரோன்கள் மற்றும் சுற்றித் திரியும் வெடிமருந்துகளை இடைமறிப்பதாலும் ஏற்பட்டவை" என்று அமைச்சகம் மேலும் கூறுகிறது.

இன்று இதுவரை ஆறு ஈரானிய ஏவுகணைகள் மற்றும் 131 ட்ரோன்களை இடைமறித்ததாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஒரு ஏவுகணை மற்றும் ஆறு ட்ரோன்கள் குறித்த பிரதேசத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 16 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri