இலங்கையில் மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை குறித்து வெளியான தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவோரின் எண்ணிக்கை 70 இலட்சம் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் இதனை அறிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி போன்றவை அத்தியாவசிய சேவைகள் மருந்து பற்றாக்குறை, உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறுவர்களுக்கான மனிதாபிமான உதவி
இந்தநிலையில் 23 இலட்சம் சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது.
5 வயதுக்கு உட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 56,000 குழந்தைகளுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அத்துடன் 4.8 மில்லியன் சிறுவர்களுக்கு
தடையில்லா கல்வி கிடைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான
யுனிசெப் தெரிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam