நாமலின் துரதிஷ்டம்: முடிவுக்கு வரும் ராஜபக்ச அரசியல் - 80 ஆண்டு கால குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி?

Srilanka Political King Namal Rajapaksa Basil Udaya Gammanpilla Ottaman
By Steephen Mar 29, 2022 12:09 PM GMT
Report

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் நாளில் ராஜபக்சவினரின் அரசியல் மாத்திரமல்ல கடந்த 80 ஆண்டுகளாக இருந்து வந்த குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்சவினர் இழந்து வரும் வாக்கு வங்கியை சேகரித்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்ச்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

நாமல் ராஜபக்சவின் துரதிஷ்டம் காரணமாக தற்போதைய அரசாங்கம் முடிவுக்கு வரும் போது ராஜபக்சவினரின் அரசியலும் முடிவுக்கு வரும். அது மாத்திரமல்ல 80 ஆண்டு குடும்ப அரசியலும் முடிவுக்கு வரும். எமக்கு ராஜபக்ச ஒருவரை மன்னராக கொண்டு வரும் தேவையில்லை.

எந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஆளப்போவது பசில் ராஜபக்ச. பசில் ராஜபக்சவின் செயற்பாடுகளை நோக்கும் போது எமக்கு ஒட்டோமான் பேரரசில் இருந்த கோஷம் சுல்தானா நினைவுக்கு வருகிறார்.

17 ஆம் நூற்றாண்டு வரை மூன்று கண்டங்களில் பரவி இருந்த ஒட்டோமான் பேரரசின் அரசரின் அஸ்மான் சுல்தானின் அழகான மனைவியே கோஷம் சுல்தானா. அந்த பெண்ணே மன்னருக்கு பின்னால் இருந்து நாட்டை ஆட்சி செய்தார்.

மன்னர் இறந்த பின்னர் புதல்வரான முராத்தை சிங்காசனத்தில் அமர்த்தி அந்த பெண் ஆட்சி செய்தார். தாயின் தலையீடுகளை எதிர்த்தன் காரணமாக முராத்தை கொலை செய்து விட்டு, இளைய புதல்வரான இப்ராஹிமை சிங்காசனத்தில் அமர்த்தி பொம்மை ஆட்சியை நடத்தி வந்தார்.

அவர் எதிர்த்ததும் மகனை கொலை செய்து விட்டு பேரனை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். அன்று துருக்கியில் யார் மன்னராக பதவிக்கு வந்தாலும் ஆட்சி செய்தது கோஷமி சுல்தானா.

அதேபோல் இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஆட்சி செய்ய போவது பசில் ராஜபக்ச. 20வது திருத்தச் சட்டம் காரணமாக பசில் மன்னரானதாக சிலர் மாயையை பரப்பி வருகின்றனர்.

20வது திருத்தச் சட்டத்தின் மூலம் அவருக்கு நிதியமைச்சர் பதவி மாத்திரமே கிடைத்தது. நிதியமைச்சருக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் எப்படி கிடைக்கும்?. ஜே.ஆர் ஜெயவர்தனவின் அரசாங்கத்தை ரொனி டி மெல் ஆட்சி செய்தாரா?.

பிரேமதாசவின் அரசாங்கத்தை கே.என். சொக்சி கட்டுப்படுத்தினரா?. சிறிசேனவின் அரசாங்கத்தை மங்கள சமரவீர கட்டுப்படுத்தினாரா?. இல்லை.

பசில் ராஜபக்ச 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்த நிதியமைச்சர் பதவியை வைத்து அல்ல.நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என்ற முறையிலேயே அவர் நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார். சரியாக கூறுவதானால், நாட்டை அழித்து வருகிறார்.

19வது திருத்தச் சட்டத்தின் இருந்த ஒரு ஓட்டையை பயன்படுத்தி அர்ஜூன் மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வர முடிந்தது. 20 வது திருத்தச் சட்டத்தை கொண்டு வரவிட்டாலும் பசில் 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி நாட்டை ஆட்சி செய்திருப்பார்.

19வது திருத்தச் சட்டத்தில் உள்ள மூடப்படாத சில ஓட்டைகளை மூட வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியாக மாத்திரமல்ல, எந்த அரச பதவியையும் வகிக்க முடியாதவாறு 22 வது அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளோம்.

இதன் மூலம் இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் மக்கள் பிரதிநிதியாக, அரசாங்கத்தில் பதவிகளை வகிக்க முடியாது என்பதுடன் நீதித்துறையில் நீதிபதியாகவும் கடமையாற்ற முடியாது எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US