கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய சந்தேக நபர் கைது
தலவாக்கலை, அக்கரபத்தனையில் உள்ள ஹோல்புரூக் பகுதியில் பாதாள உலக கொலைகளில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அக்கரபத்தன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 32 வயதுடைய லஹிரு சம்பத் என தெரியவந்துள்ளது.
பாதாள உலகத் தலைவர்கள்
மீதியகொட பகுதியில் நடந்த பல கொலைகளுக்குத் தேடப்படும் சந்தேக நபர் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த நாட்டில் சிலரைத் தொடர்பு கொள்ளத் தேவையான வட்ஸ்அப் தொழில்நுட்பத்தை வழங்கியதாக கைது செய்த பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர்களின் தொலைபேசிகளின் பகுப்பாய்வின்படி, சந்தேக நபர் அக்கரபத்தன பகுதியில் உள்ள தனது மனைவியின் வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு உத்தரவு
அக்கரபத்தன பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று (03)பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் நுவரெலியா நீதவான் லங்காகனி பிரபுத்திகா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மேலும் சந்தேக நபரை மீட்டியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் அக்ரபத்தன பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri