மத்திய கிழக்கில் ஆபத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் சிக்கல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை விரைவாக அழைத்து வருவது கடினமாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுத் தூதரகங்கள்
அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் அவர்களின் நலனுக்காகப் பணியாற்றவும் அரசாங்கம் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

அதற்கமைய வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சகமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தலையிட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு பணியகம்
வெளியுறவு அமைச்சின் தூதரகப் பிரிவை 0094742595546 என்ற எண்ணில் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை 0094719802822 என்ற எண்ணில் அழைப்பதன் மூலம் இலங்கையர்கள் தேவையான உதவிகளைப் பெறலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

1989 என்ற எண் செயல்படும் எனவும், மத்திய கிழக்கில் பணி புரியும் இலங்கையர்கள் இந்த எண்ணின் மூலம் தேவையான உதவிகளைப் பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam