இலங்கை விரையும் ஐக்கிய நாடுகளின் அடிமை முறை அறிக்கையாளர்
ஐக்கிய நாடுகளின் நவீன அடிமை முறைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா,(Tomoya Obokata) எதிர்வரும் 26 முதல் டிசம்பர் 3 வரை இலங்கைக்கான தனது முதல் பயணத்தை மேற்கொள்கிறார்.
அவர் தமது பயணத்தின்போது, ஆடைத் தொழில், தேயிலை பெருந்தோட்டங்கள், சுற்றுலா மற்றும் வீட்டு வேலை உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் துறைகளில் உள்ள தொழிலாளர் நிலைமைகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
இலங்கையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் தடைகளை அவர் மதிப்பீடு செய்யவுள்ளார்.
இந்தநிலையில் தாம், இலங்கையில், நவீன அடிமைத்தனம் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் உட்பட்ட விடயங்களை மதிப்பிடுவதில் ஆர்வமாக இருப்பதாக டொமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.
தமது பயணத்தின்போது, அரச பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தாம், 2022 செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் டொமோயா ஒபோகாடா தெரிவித்துள்ளார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam