நியூசிலாந்தின் உலக ப்ரீமியர் தொடரிற்கான நடுவராக மூதூரை சேர்ந்தவர் தெரிவு
நியூசிலாந்தின் அவுக்லாந்த் கிரிக்கெட் சபையின் 2025இற்கான ஆடவர் மற்றும் மகளிர் உலக ப்ரீமியர் தொடருக்கான நடுவராக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மூதூர் சிஹான் சுஹூட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தொடரானது 2024 டிசம்பர் முதல் 2025 ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நியூசிலாந்தின் அவுக்லாந்த் மற்றும் வெலிங்க்டன் நகரங்களிலே நடைபெறவுள்ளது.
குறித்த தொடருக்கான இரண்டாம் மற்றும் நொக் அவுட் சுற்றுக்களுக்காவே நடுவர் சிஹான் சுஹூட் அவுக்லாந்த் கிரிக்கட் சபையினால் அழைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபை
குறித்த தொடரில் பல அனுபவம் வாய்ந்த சர்வதேச நடுவர்கள் பங்குபற்றுவதும் சிறப்பம்சமாகும்.
இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து நியூசிலாந்தின் பிறீமியர் தொடரில் பங்குபெறும் முதல் இலங்கை நடுவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர் 2022இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர் கிரிக்கட்டின் முதல் தர போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கட் சபையிலிருந்து தெரிவான முதலாவது நடுவருமாவார்.
சிரேஸ்ட நடுவர்
மேலும், இவர் தற்போது இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் பிராந்திய முதல் தரம் மற்றும் பிறீமியர் தொடரின் நடுவராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மூதூர் மத்திய கல்லூரி, இ.கி.ச. திருகோணமலை இந்துக் கல்லூரி மற்றும் மாவனல்ல சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான சிஹான் சுஹூட் திருமலை கிரிக்கட் சங்கம் மற்றும் நடுவர்கள் சங்கத்தின் சிரேஸ்ட நடுவருமாவார்.
2016 தொடக்கம் தேசிய ரீதியாக இலங்கையில் பல மாவட்டங்களிலும் நடுவராக பணியாற்றிய சிஹான் சுஹூட், 2022 இல் இருந்து இன்று வரை கிரிக்கட்டின் முதல்தர நாடுகளில் பிராந்திய மற்றும் முதல்தர போட்டிகளில் நடுவராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
