பிரித்தானியா சென்ற உக்ரைன் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பிரித்தானியாவில் அகதிகளாக குடியேறிய உக்ரைன் நாட்டவர்கள் பலர் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் பலருக்கு தங்குமிடம் கிடைக்காததால் அல்லது அவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்து போனதால், வீடற்றவர்களாகவோ அல்லது வீடற்ற நிலைக்கு ஆளாகவோ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, பிரித்தானியாவில் மொத்தம் 660 உக்ரேனிய குடும்பங்கள் வீடற்ற நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் அவர்கள் வீடற்றவர்களாக மதிப்பிடப்பட்டுள்ளனர்.

புள்ளிவிவரங்கள் உண்மையான அளவைப் பிரதிபலிக்கவில்லை
இதில், 480 குடும்பங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உள்ளூர் அதிகாரிகளில் கால் பகுதியினர் கணக்கெடுப்புக்கு பதிலளிக்காததால் புள்ளிவிவரங்கள் உண்மையான அளவைப் பிரதிபலிக்கவில்லை.
"பெரும்பான்மையான மக்கள் நல்ல முறையில் குடியேறியுள்ளனர். இந்நிலையில், Homes for Ukraine திட்டத்தின் கீழ் புதிய அனுசரணையாளர்களை கண்டுபிடிப்பதற்கு மறுபரிசீலனைச் சேவைக்கான அணுகல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து 77,200 க்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri