உக்ரைன் போர்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களின்றி தவிப்பு - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் - செவெரோடோனெட்ஸ்க் நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்துவிட்ட நிலையில், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அவர்களில் பலர் நகரின் அசோட் இரசாயன ஆலைக்குக் கீழே உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர்.
நகரத்திற்கு வெளியே செல்லும் கடைசி பாலம் இந்த வார தொடக்கத்தில் சண்டையில் அழிக்கப்பட்டது. இது உள்ளே மீதமுள்ள 12,000 குடியிருப்பாளர்களைத் திறம்படச் சிக்க வைத்தது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,