ரஷ்யாவின் முக்கிய காய் நகர்த்தல்! கருங்கடலிலிருந்து துண்டிக்கப்படவுள்ள உக்ரைன்
உக்ரைனை கடல் அல்லாத நாடாக ஆக்கும் முயற்சியாக, ட்னிப்ரோ நதிக்கு கிழக்கே உள்ள உக்ரைனின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், கருங்கடலிலிருந்து உக்ரைன் துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை மட்டுமே கொண்ட நாடாக மாறும் என கூறியுள்ளது.
உக்ரைனின் பெரும் பகுதிகளை இந்தாண்டு இறுதிக்குள் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவின் திட்டமிடல்
முன்னதாக ரஷ்யா - உக்ரைன் போருக்கான மூல காரணம், நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சி செய்வது என கூறப்பட்டாலும், தற்போது போருக்கான காரணம் வேறொன்றாக மாறியதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கவே ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
ஆனால், ட்னிப்ரோதான் உக்ரைனின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களித்து வருகிறது. உக்ரைனின் மொத்த பரப்பளவானது, 6.03 இலட்சம் சதுர கிலோமீட்டர். இதில் 3.36 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உக்ரைன் அலுவலகம் கூறுகையில், எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதிக்குள் உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாநிலங்களை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாக வடக்கு உக்ரைன் வரை ஆக்கிரமித்து, தனது எல்லையை நிறுவ ரஷ்யா முயற்சிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் 31 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
