ஐரோப்பாவின் மிகப்பெரிய மனித பேரவல யுத்தத்திற்கு ஆயத்தமாகும் ரஸ்யா! போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை
ஐரோப்பாவின் மிகப் பெரிய யுத்தத்திற்கு ரஸ்யா ஆயத்தமாகி வருகின்றது என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
1945ம் ஆண்டுக்கு பின்னர் ஐரோப்பாவில் இடம்பெறக்கூடிய மிகப் பெரிய போருக்கான முனைப்புக்களை ரஸ்யா மேற்கொள்வதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா ஏற்கனவே போர் முனைப்புக்களை தொடங்கிவிட்டதாகவே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேய்ன் மீது படையெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்தம் பாரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தக் கூடியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.