சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் ரஷ்யா (Video)
ரஷ்ய துருப்பினர் யுக்ரேன் எல்லையில் அதிக அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐரோப்பாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்தே குறித்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தில் தடையேற்பட்டுள்ளது.
இந்நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.
4 கோடியே 30 லட்சம் மக்களை கொண்ட யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அது சர்வதேச விதிகளை முற்றாக புறக்கணிக்கும் நடவடிக்கையாக கருத முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
