உக்ரைன் - ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை இந்த வாரத்தில்.. ஜெலன்ஸ்கி தகவல்!
உக்ரைன் - ரஷ்யா இடையிலான ஐந்தாம் ஆண்டு போர் நீடித்து வரும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஜெனிவாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் மற்றும் இராஜதந்திர தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
முத்தரப்புக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனைகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையில், மார்ச் மாதத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டதாக ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தின் எஞ்சிய பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது.
ஆனால், உக்ரைன் தனது இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால் மட்டுமே உக்ரைனின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான சர்வதேச நிதி உதவி கிடைக்கும் என்பதால், இந்தப் பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam