உக்ரைன் - ரஷ்ய போருக்கான காரணத்தை முதன்முதலில் வெளியிட்ட புடின்
உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது இராணுவம் போராடி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மீண்டும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் ஏவுகணைகளால் உக்ரைன் அதிரும் வாய்ப்புகள் உள்ளதாக உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி பேரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே புடின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் போராடும் இராணுவம்
நமது நிலம், நமது மக்களுக்கு உரிமையான நிலம், அதை மீட்கவே நமது இராணுவம் உக்ரைனில் போராடி வருகின்றது.
உக்ரைனில் போரிடும் நமது இராணுவத்தினர் மிகவும் வீரத்துடனும் ஆவேசத்துடனும், நமது நாட்டுக்காக போரிடுகிறார்கள், அவர்களின் வீரத்தை வணங்குகிறேன், அவர்களின் துணிவைக் கண்டு பெருமை கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், உக்ரைனின் டான்பாஸ், மரியுபோல் ஆகிய பகுதிகளில் இருந்து சிறார்களை மேடையேற்றி ரஷ்யாவுக்கு ஆதரவாக முழக்கமிட வைத்துள்ளனர்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri
