மோசமடையும் இலங்கையின் நிலை! - பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுள்ள நிலையில், பிரித்தானியா பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றது.
மளிகைக் கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம். மின்சாரமும் துண்டிக்கப்படுகின்றது. சமீபகாலமாக பல போராட்டங்கள் நடந்தன. மார்ச் 31 அன்று கொழும்பில் தற்காலிகமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இன்னும் சில தினங்களில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏப்ரல் 1 அன்று, இலங்கை அரசாங்கம் பொது அவசரநிலையை அறிவித்தது, மேலும் 2 ஏப்ரல் 2022 அன்று மாலை 6 மணி முதல் 4 ஏப்ரல் 2022 காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.
மேலும் ஊரடங்குச் சட்டம் உட்பட உள்ளூர் கட்டுப்பாடுகள் குறுகிய அறிவிப்பில் விதிக்கப்படலாம். விழிப்புடன் இருக்க வேண்டும், ஆர்ப்பாட்டங்கள் அல்லது பெரிய கூட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam