பிரித்தானிய விசா விண்ணப்பிக்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல்
இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் கட்டணத்தை அந்நாட்டு அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 6000 ரூபா) உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மாணவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (50700 ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பித்தல் கட்டணம்
அதன்படி இங்கிலாந்துக்கு வெளியே அதாவது சர்வதேச மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டுகளாகவும் (196000 ரூபா), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (46000 ரூபா) உயர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும் முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விசா கட்டண உயர்வு எதிர்வரும் அக்டோபர் 4ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர் விசா விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
