கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விதைகளை கொண்டு வந்தவரே இவ்வாறு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விதைகள்
சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பயணப்பொதியில் இருந்து 8 பொதிகளாக காணப்பட்ட 40 கிராம் நிறையுடைய கஞ்சா மற்றும் 58 கஞ்சா விதைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பிரித்தானிய பிரஜை ஏற்கனவே கஞ்சா விதைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அபராதம் செலுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கஞ்சா விதைகளுடன் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
