லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்! புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண்ணான 89 வயது மூதாட்டியை பேரன் கொலை செய்த வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படமும் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
பிரான்ஸிஸ் வசித்து வந்த 89 வயதுடைய சகுந்தலா என்ற பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் குழு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கைது
சகுந்தலாவை கொலை வழக்கில் அவரின் பேரன் வெருஷன் மனோகரன் (31) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam