லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்! புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
லண்டனில் இலங்கை தமிழ்ப்பெண்ணான 89 வயது மூதாட்டியை பேரன் கொலை செய்த வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படமும் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
பிரான்ஸிஸ் வசித்து வந்த 89 வயதுடைய சகுந்தலா என்ற பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் குழு மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் கைது
சகுந்தலாவை கொலை வழக்கில் அவரின் பேரன் வெருஷன் மனோகரன் (31) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு