பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர்களின் மோசமான செயல்
பிரித்தானியாவில் இருந்து வந்த ஆணும் பெண்ணும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பொரளை பகுதியில் வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனனர்.
பல வருடங்களுக்காக குறித்த வீட்டில் தாயும் மகனும் ஒன்றாக தங்கிருந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை களவாக விற்பனை செய்தமை தெரிய வந்துள்ளது.
கொள்ளை சம்பவம்
விமானப்படை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் இந்த வீட்டில் இருந்த 7 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடி இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.