ஹார்முஸ் நீரிணை விவகாரம் - இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியா அனுமதி
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கி வரும் ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, பிரிட்டனில் உள்ள இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரானுடனான போர் மற்றும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மறிப்பது குறித்து விவாதிப்பதற்காக பிரிட்டிஷ் அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்
பிராந்தியத்தின் கூட்டுத் தற்காப்பிற்காக பிரிட்டன் தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களைத் தாக்கப் பயன்படுத்தப்படும் ஏவுகணைத் தளங்களையும் திறன்களையும் செயலிழக்கச் செய்வதற்கான அமெரிக்கத் தற்காப்பு நடவடிக்கைகளும் அடங்கும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் பிரிட்டன் போரில் ஈடுபடாது என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த வாரம் தெரிவித்திருந்தார்.
எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் சட்ட பூர்வமானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறி, ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை அவர் ஆரம்பத்தில் நிராகரித்திருந்தார்.
ஆனால், மத்திய கிழக்கு முழுவதும் பிரிட்டனின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்திய பின்னர், ஸ்டார்மர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க - பிரிட்டிஷ் கூட்டுத் தளமான ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்டு மற்றும் டியாகோ கார்சியாவை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.