சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க தனது ஒரே விமான நிலையத்தை இழக்கும் உகாண்டா
சீனாவுடன் பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தை உகண்டா சீனாவிடம் இழந்துள்ளதாக ஆபிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாத காரணத்தினால் இவ்விமான நிலையம் சுவீகரிக்கப்படவுள்ளதாகக் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காகவே உகண்டாவினால் 2015 ஆம் ஆண்டில், சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி (EXIM) வங்கி, உகண்டாவிற்கு 207 மில்லியன் டொலரை இரண்டு சதவீத வட்டி அடிப்படையில் கடனாக வழங்கியுள்ளது.
இதனிடையே உகண்டா தனது கடனைத் திருப்பச் செலுத்த முடியாமல் போனால், என்டெப்பெ விமான நிலையத்தைச் சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று இந்தக் கடன் ஒப்பந்தத்தின் சரத்தொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தக் கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உகண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி, உயர்மட்ட குழுவினரைச் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக குறித்த ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam