உடவலவ பிரதேசம் போராட்ட பூமியாக மாறும்: லஹிரு வீரசேகர எச்சரிக்கை
சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் உடவலவ பிரதேசம் போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன் தினம் (03.10.2022) நடந்த ஊடக சந்திப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் கொடுக்கின்றோம்.
போராட்ட பூமியாக மாறவுள்ள உடவலவ பிரதேசம்
இல்லையென்றால் அந்த இடம் மீண்டும் போராட்ட பூமியாக மாறுவதை தடுக்க முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடுமையாக கூறுகின்றோம்.
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்காக உடவலவ சங்கபால கல்பொக்க நீர்நிலையின் ஒரு பகுதியில் கல்சியம் சிலிக்கேட் கனிம பாறைகளை அகழ்வு செய்யும் நிறுவனத்தின் முயற்சிகள் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கல்பொக்க மலைத்தொடரைக் காப்பாற்றும் மக்கள் இயக்கம்
கடந்த நாட்களில் லங்வா நிறுவன அதிகாரிகள் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளுடன் மாதிரிகளை பெற்றுக் கொள்ள குறித்த
இடத்திற்கு வந்தபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கல்பொக்க மலைத்தொடரைக் காப்பாற்றும் மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான நிமல் மற்றும் பியதிலக ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்பொக்க மலைத்தொடரை காப்பாற்றும் மக்கள் இயக்கம் அப்பிரதேச மக்களின் மாத்திரம் ஒன்றிணைந்த அமைப்பல்ல என தெரிவித்துள்ளார்.